சென்னை புளியந்தோப்பில் இந்து முன்னணி முன்னாள் மாவட்ட செயலாளருக்கு தர்ம அடி: போலீசார் தகவல்

சென்னை: சென்னை புளியந்தோப்பில் இந்து முன்னணி முன்னாள் மாவட்ட செயலாளர் முகுந்தனுக்கு அடி உதை ஏற்பட்டுள்ளது. முன்விரோதம் காரணமாக விசு, வாசு, குமார் உள்ளிட்டோர் சேர்ந்து முகுந்தனை தாக்கியதாக போலீசார் தகவல் அளித்துள்ளனர். தேர்தல் நாளன்று வாக்குச்சாவடி மையத்தில் குடிபோதையில் பாஜகவுக்கு முகுந்தன் ஒட்டு கேட்டார். தேர்தல் அதிகாரி புகாரின் பேரில் முகுந்தனை போலீசார் கைது செய்து பின்னர் ஜாமினில் விடுவித்தனர்.

The post சென்னை புளியந்தோப்பில் இந்து முன்னணி முன்னாள் மாவட்ட செயலாளருக்கு தர்ம அடி: போலீசார் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: