டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சிகள் பதுக்கிய 2 பேர் கைது

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகே உள்ள கணபதி பாளையத்தை சேர்ந்தவர் தளபதி (71). இவர், பாறைகளை உடைப்பதற்காக எவ்வித அனுமதியின்றி டெட்டனேட்டர் மற்றும் ஜெலட்டின் குச்சிகளை தனது தோட்டத்து சாலையில் பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த ஆனைமலை எஸ்ஐ முருகானந்தம் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் இரவில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அங்குள்ள தோட்டத்தின் ஒரு பகுதியில் அனுமதியின்றி வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 950 டெட்டனேட்டர்கள், 165 ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிபொருட்களை பறிமுதல் செய்ததுடன், அதனை எந்தவித முறையான அனுமதியின்றி வைத்திருந்த தளபதி (71), அதற்கு உறுதுணையாக இருந்த ராமசாமி (50) ஆகிய இருவரை கைது செய்தனர்.

The post டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சிகள் பதுக்கிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: