தந்தையை அடித்து கொன்ற மகன்: கிணற்றுக்குள் குதித்து தற்கொலை முயற்சி

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள கீழக்குறிச்சியை சேர்ந்தவர் கணேசன் (60). இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் மூத்த மகன் வினோத்குமார் (32), தனது தந்தையிடம், அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த வினோத்குமார் அருகில் கிடந்த கம்பியை எடுத்து தனது தந்தை கணேசனை தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் பயந்து போன வினோத்குமார் செய்வதறியாது தவித்தார். உடனே அவர், தற்கொலை செய்ய தனது வீட்டுக்கு அருகில் இருந்த கிணற்றுக்குள் குத்தித்தார்.

ஆனால் கிணற்றில் இடுப்பு அளவு தண்ணீர் இருந்ததால் உயிர் தப்பினார். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றுக்குள் இடுப்பு அளவு தண்ணீரில் நின்று கொண்டு இருந்த வினோத்குமாரை கயிறு மூலம் மீட்டு அன்னவாசல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தனர்.

The post தந்தையை அடித்து கொன்ற மகன்: கிணற்றுக்குள் குதித்து தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: