தொழில் வணிக கழகம் சார்பில் அமைச்சருடன் வணிகர்கள் கலந்துரையாடல்

 

காரைக்குடி, ஜூன் 29: காரைக்குடி தொழில் வணிக கழகம் சார்பில் கனிம வளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபுவுக்கு பாராட்டு விழா மற்றும் வணிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் டி.கே. பிரபு ஏற்புரை வழங்கி வணிகர்களுடன் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டார். தொழில் வணிக கழகத் தலைவர் லயன் கண்ணப்பன் தலைமை வகித்தார். செயலாளர் எஸ்எல்பி.சரவணன் விழா நோக்க உரையாற்றினார். எஸ்எல்என்.பெரியணன், இணைச் செயலாளர்கள் முருகேசன், சண்முகநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழா ஒருங்கிணைப்பாளர் பள்ளத்தூர்  விசாலம் சிட் ஃபண்ட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் அரு.உமாபதி நினைவு பரிசு வழங்கினார்.

நிகழ்ச்சியில் தொழில் வணிக கழக நிர்வாகிகள், தொழிலதிபர்கள், வணிகர்கள், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர். தொழில் வளர்ச்சி, வணிக மேம்பாடு, தொழில் முனைவோருக்கான அரசின் திட்டங்கள் மற்றும் காரைக்குடி உள்ளிட்ட சிவகங்கை மாவட்ட வளர்ச்சி குறித்து கருத்துகள் பரிமாறப்பட்டன. துணைத் தலைவர் நாகநாதன் நன்றி கூறினார்.

 

Related Stories: