பைக் மீது லாரி மோதியதில் டெய்லர் பலி

 

திருப்பூர்,ஜூலை8: திருப்பூர், காங்கயம் ரோடு, முதலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிற்றரசு (25). இவரது நண்பர் கணேஷ் (25). இவர்கள் இருவரும் பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் நேற்று முதலிபாளையத்திலிருந்து பெருந்தொழுவு நோக்கி பைக்கில் சென்றனர். பைக்கை கணேஷ் ஓட்டினார். சிற்றரசு பின்னால் அமந்திருந்தார். அப்போது எதிரே வந்த லாரி பைக் மீது மோதியது. இந்த விபத்தில் கணேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிற்றரசு படுகாயம் அடைந்தார்.

இது குறித்து நல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கணேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த சிற்றரசுவை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் லாரி ஓட்டுனர் வருண் (30), என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

 

Related Stories: