தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

 

கோவை, ஜூலை 8: கோவை மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. நடப்பாண்டில் இன்று முதல் வரும் 21ம் தேதி வரை முகாம் நடத்தப்படும். மத்திய மண்டலத்தில் 8-7-2026 முதல் 10-7-2026 வரையிலும், கிழக்கு மண்டலத்தில் 13-7-2026 மற்றும் 14-7-2026 வரையிலும், மேற்கு மண்டலத்தில் 15-7-2026 மற்றும் 16-7-2026 வரையிலும் வடக்கு மண்டலத்தில் 17-7-2026 மற்றும் 18-7-2026 வரையிலும் தெற்கு மண்டலத்தில் 20-7-2026 மற்றும் 21-7-2026 வரை 5 மண்டலங்களிலும் முகாம்கள் நடைபெறவுள்ளது.

இது முற்றிலும் பன்நோக்கு உயர்தர மருத்துவ பரிசோதனைகள் மூலம் இருதயம், நுரையீரல், கண்,பல், எழும்பு மூட்டு மருத்துவம் மற்றும் இயன்முறை மருத்துவம், தோல், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம் வாழ்க்கை நடைமுறை மாற்ற நல்வாழ்வு மையம், மகப்பேறு மருத்துவம் மற்றும் மகளிர் நல மருத்துவம், பாத பரிசோதனை மையம் உள்ளிட்ட மருத்துவ பிரிவுகளும் ஹீமோ குளோபின், ரத்த வகை கண்டறிதல், ரத்த சர்க்கரை அளவு, ரத்த கொழுப்பு அளவு, பித்த திரமி, யூரியா கிரியட்டினின் வி.டி.ஆர்.எல், எச்.ஐ.வி மாதிரி பரிசோதனை,

இ.சி.ஜி ஸ்கேன் கர்ப்பபை வாய் ஆகிய பரிசோதனைகள் மற்றும் சிறப்பு மருத்துவர்களால் புற்றுநோய் பரிசோதனை மார்பக புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்படும். இம்முகாமில் தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என சுமார் 5 ஆயிரம் பேர் பயன்பெற வாய்ப்புள்ளது.

 

Related Stories: