மல்லசமுத்திரம்: நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் தாயின் பராமரிப்பில் 25 வயது மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவர் கடந்த 10 நாட்களாக வாந்தி எடுத்தவாறு இருந்தார். மல்லசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மகளை அழைத்துச் சென்ற தாய் பரிசோதித்துள்ளார். அப்போது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.
இதுபற்றி மல்லசமுத்திரம் போலீசில், தாயார் புகார் தெரிவித்தார். போலீசார் விசாரித்த போது, அதே பகுதியில் வசித்து வரும் தவெக நிர்வாகியான மணிகண்டன்(33) என்பவர், கடந்த 2 மாதமாக அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த மல்லசமுத்திரம் போலீசார், நேற்று மணிகண்டனை கைது செய்து திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில், அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
