மனித உறுப்பு மோசடி; கேரளத்தில் 6 இடங்களில் ஈடி சோதனை

திருவனந்தபுரம்: கேரளத்தில் மனித உறுப்புகள் மோசடி நடைபெற்று வருவதாக நீண்ட காலமாக புகார் கூறப்பட்டு வருகிறது. இதையடுத்து நேற்று கொச்சி, திருவனந்தபுரம், கோட்டயம், கொல்லம் ஆகிய இடங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் இடைத்தரகர்களின் வீடுகள் உள்பட 6 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த மோசடிக் கும்பலில் முக்கிய நபராக கருதப்படும் காசர்கோட்டை சேர்ந்த நஜீப் என்பவரின் வங்கிக் கணக்குக்கு கொச்சியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து லட்சக்கணக்கில் பணம் அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று நடந்த சோதனையில் இதற்கான ஆவணங்களை அமலாக்கத் துறையினர் கைப்பற்றினர்.

Related Stories: