சென்னை: சென்னையில் ரயில்வே சிக்னல் விளக்கை துணி கொண்டு மறைத்து, நடுவழியில் |ரயில்கள் நின்றதும் உள்ளே ஏறி பயணிகளிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான வில்லிவாக்கத்தைச் சேர்ந்த குமரேசன் (35) மீது ஏற்கனவே 6 வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. குண்டர் சட்டத்திலும் கைதாகி சிறையில் இருந்துள்ளார்
