திருவாரூர்: திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் தனியாக நின்ற பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த புகாரில் தவெக ஒன்றிய செயலாளர் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளரான ஆனந்தராஜ் (24) மற்றும் அவரது நண்பர் அசோக் தொந்தரவு செய்ததை அடுத்து அப்பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் இருவரையும் ‘ஈவ் டீசிங்’ வழக்கில் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
