கோவை, மே20: கோவை மாநகராட்சி குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில் ராஜவாய்க்காலை தூர்வார கோரி மமக-வினர் மனு கொடுத்தனர். கோவை மாநகராட்சி அலுவலகத்தில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை மேயர் ரங்கநாயகி தலைமையில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும். இதில், பொதுமக்கள் குடிநீர் வசதி, சாலை வசதி, மின் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகள், குறைகள் சம்பந்தமான மனுக்களை அளித்து வருகின்றனர். இதற்கிடையே, கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி கடைசியாக மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது. தேர்தல் நடத்தை விதி காரணமாக கடந்த 2 மாதங்களாக மக்கள் குறை கூட்டம் நடைபெறவில்லை. நேற்று மீண்டும் மாநகராட்சி அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
