மேகதாது அணை விவகாரம்: அன்புமணி ராமதாசுக்கு காங்கிரஸ் கண்டனம்

 

கோவை, ஜூலை 31: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேகதாது அணை விவகாரத்தில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் மாணிக்கம் தாகூருக்கு எச்சரிக்கை விடுப்பது காலத்தின் கோலம். இதை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. பீரங்கி குண்டுகளையும், தூக்கு மேடைகளையும் எதிர்கொண்டவர்கள் காங்கிரஸ் கட்சியினர்.

மாணிக்கம் தாகூர் மூன்றாவது தலைமுறை காங்கிரஸ்காரர். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட, கர்நாடக அரசுக்கு, தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என்று கூறிய கர்நாடகத்தை சேர்ந்த ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சரையோ, இந்த திட்டத்திற்கு ஆதரவாக செயல்படும் பிரதமர் மோடியையோ கேள்வி கேட்க அன்புமணி ராமதாசுக்கு துணிவு உள்ளதா? தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் மாணிக்கம் தாகூரை சீண்டிப் பார்க்க வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

 

Related Stories: