ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

 

கோவை, ஆக. 1: கோவை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் குவிந்தனர். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில் அனைத்து அம்மன் கோயில்களிலும் தினந்தோறும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் மற்றும் திருவிழாக்கள் நடப்பது வழக்கம். இந்த ஆடி மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமை நாட்களிலும் கோயில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு செல்வார்கள். இந்நிலையில், ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று கோவையில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் காலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

 

Related Stories: