கோவை, ஜூலை 29: கோவை மண்டலத்தில் அரசு பஸ்கள் இயக்கம், பயணச்சீட்டு வழங்குவது உள்ளிட்டவற்றை முறையாக கண்காணிக்க வேண்டும் என கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி செக்கிங் இன்ஸ்பெக்டர்கள், போக்குவரத்து ஆய்வாளர்கள், ஓட்டுநர் பயிற்றுநர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
கோவை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தலைமை அலுவலக கூட்ட அரங்கில் மண்டல அளவிலான பயணச்சீட்டு பரிசோதகர்கள், ஓட்டுநர் பயிற்றுநர்கள், போக்குவரத்து ஆய்வாளர்களுக்கான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்திற்கு மேலாண் இயக்குனர் முகமது நாசர் தலைமை வகித்தார். இதில், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் உதகை மண்டலங்களில் பணிபுரியும் அனைத்து பயணச்சீட்டு பரிசோத்தார்கள், ஓட்டுநர் பயிற்றுநர்கள் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பயணிகளுக்கான சேவையை வழங்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களின் பணியை கண்காணிக்கும் அலுவலர்களான பயணச்சீட்டு பரிசோதர்கள், போக்குவரத்து ஆய்வாளர்கள் மற்றும் ஓட்டுநர் பயிற்றுநர்கள் ஆகிய அனைவரும் உரிய முழு சீருடையுடன் பணியில் ஈடுபட வேண்டும்.
