சென்னை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்ற வேண்டுமென நாம் தொடர்ந்து போராடி வருகிறோம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இப்போராட்டத்தின் அடுத்தகட்டமாக, சதுர்த்தியும் கிருத்திகையும் இணைந்து வரும் சிறப்பான நன்னாளான இன்று அதாவது பிப்ரவரி 23ம் தேதி (நேற்று), முருகப்பெருமானுக்காக ஆறு தீபங்கள் மற்றும் நாம் சார்ந்த பகுதியின் நன்மைக்காக ஒரு தீபம் என நம் வீடுகளில் மொத்தம் ஏழு விளக்குகளில் தீபமேற்றி, கந்தசஷ்டி கவசத்தை நாம் பாராயணம் செய்ய வேண்டுமென உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன். அதே போல வருகின்ற மார்ச் 2ம் தேதி பவுர்ணமியன்று, மாலை வேளையில் திருப்பரங்குன்ற மலையில் கிரிவலம் வருவதற்கும் மக்கள் முன்வர வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கிறேன். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. வீர தண்டாயுதபாணிக்கு அரோகரா. சஷ்டிபாடுவோம் தீபம் ஏற்றுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றத்தில் வரும் 2ம் தேதி கிரிவலம்: மக்களுக்கு நயினார் அழைப்பு
- கிரிவலம்
- திருப்பரங்குன்றம்
- நைனார்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பாஜக
- நைனார் நாகேந்திரன்
- கார்த்திகை
- தீபத்தூன்
- சதுர்த்தி
- கிருத்திகை
