எடப்பாடி பழனிசாமி தற்போது தோல்வி பயத்தில் திணறிப் போய் உள்ளார்: திமுக மாநில அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி

வேலூர்: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி பென்னாத்தூர் பேரூராட்சி திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக மாநில அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசியதாவது: பல நெருக்கடிகளுக்கு மத்தியில் தாய்மார்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.5,000 வழங்கப்பட்டுள்ளது. இந்த ஐந்தாயிரம் ரூபாய் வழங்குவது முதல்வருடன் நெருக்கமாக இருந்த எங்களுக்கு கூட தெரியாது என்பதுதான் உண்மை.

இந்தியா முழுவதும் இரவோடு இரவாக பணமதிப்பின்மை செய்தவர் மோடி. அதேபோல் ஐந்தாயிரம் ரூபாயும் கொடுக்க விடாமல் தடுத்து விடுவார்கள், மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை எண்ணிய முதல்வர் இரவோடு இரவாக நடவடிக்கை எடுத்து காலையில் 1.30 கோடி பேருக்கும் ரூ.5,000 உரிமைத்தொகையை வழங்கி உள்ளார்.

உரிமைத்தொகை ஐந்தாயிரத்தை முதல்வர் வழங்குவது தெரியாமல் முன்கூட்டியே தேர்தல் அறிக்கை விட்ட எடப்பாடி பழனிசாமி தற்போது தோல்வி பயத்தில் திணறிப் போய் உள்ளார். வரக்கூடிய தேர்தலில் 200 தொகுதிகளில் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்றார்.

Related Stories: