சீரியஸா ஒரு போட்டிநடக்கும்போது இவங்க வேற குறுக்குல… டெல்லிலாம் ஜூஜூப்பி… சீமான் ஒரு காமெடி… விஜய் தாக்கு

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரியில் நேற்று நடந்த தவெக நிர்வாகி சந்திப்பு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேச தொடங்கும் முன், ‘எங்கள் ஓட்டு எங்கள் உரிமை. எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது’ என்று தொண்டர்களிடம் உறுதிமொழி எடுத்தார். பின்னர் விஜய் பேசியதாவது: நமக்கு எதிராக என்னென்ன சூழ்ச்சி நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். நமக்கு எதிராக அவதூறு பரப்புறாங்க. அதனால் உங்களுக்கு ஒரு வாக்குறுதி கொடுக்க வந்தேன். நமது ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு கிராமத்துக்கும் நான் நேரடியாக வந்து என்னுடைய சொந்தங்கள் ஆகிய உங்கள் எல்லோரையும் நான் சந்திக்கிறேன்.

விஜய்க்கும், ஸ்டாலின் சார்க்கும் நடக்கும் போர்தான் இந்த தேர்தல்; இதுக்கு நடுவில் என்டிஏ, டெல்லி என எதுவும் இல்லை. தவெகவுக்கு போட்டி திமுக தான்னு மக்களுக்கு தெளிவாக தெரியும். அப்படி இருக்கும் போது, நாம் எதாவது பேசுனா வான்டடா சில பேர் (சீமான்) வந்து வண்டில ஏறி உக்கார்ந்து கிட்டு குரல் கொடுக்கிறார்கள். சீரியஸா ஒரு போட்டி நடந்து கொண்டு இருக்கிறபோது, இங்கு காமெடிக்கு எல்லாம் இடமில்லை பாஸ். எங்கள் ஆட்சியில் மாநில மற்றும் ஒன்றிய அரசு அலுவலகங்கள், வங்கிகளின் செயல்பாடுகள் மற்றும் அவற்றை அணுகும் முறை குறித்து மாணவர்களுக்கு தெளிவான புரிதலை ஏற்படுத்தும் வகையில், தேர்வுகள் அற்ற செயல்முறை பாடமாக கற்பிக்கப்படும்.

இந்தியா முழுவதும் உள்ள ஒன்றிய அரசு சார்ந்த கல்வி நிலையங்கள் மற்றும் அதன் சேர்க்கை குறித்து புரிதலும், தெளிவும், மாணவர்களுக்கு உருவாக்கப்படும். அனைத்து அரசு பள்ளிகளிலும், பெண் குழந்தைகளுக்கு சுத்தமான சுகாதாரமான மற்றும் தரமான கதவுகள் பொருத்தப்பட்ட ரெஸ்ட் ரூம்கள் அமைப்பது உறுதி செய்யப்படும். மாவட்ட கலெக்டர்கள் எஸ்.பி.க்களில் சரிபாதி பெண்களாக இருக்கும்படி செய்வோம். மலை கிராமங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் பிரசவம் பார்க்கும் வசதியுடன் அமைக்கப்படும். பஸ் போக்குவரத்து இல்லாத கிராமங்கள் மற்றும் மலை கிராமங்களே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

* உச்ச நடிகர்…உச்ச நடிகர்தான்… ஸ்கிரிப்ட்டுல இருக்க ஒரு சீன் கூட மிஸ் ஆகல… என்ன நடிப்பு என நெட்டிசன்கள் கலாய்
வேலூரில் நேற்று நடந்த தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் விஜய் பேசினார். அப்போது, திடீரென கத்தி பேசினார். சிறிது வினாடிகள் கழித்து பேச முடியாதது போல் இருந்தார். பின்னர், கண் கலங்கி பேச முயன்றபோது, சாரி என்று சொல்லி விட்டு மீண்டும் பேச ஆரம்பித்தார். இந்நிலையில், விஜய்யின் ஸ்பீச் காபி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஸ்பீச் காப்பியில் ‘எவ்வளவு கத்தி சொல்ல முடியுமோ அவ்வளவு கத்த வேண்டும். (குறிப்பு) இந்த வரியை பேசி முடித்து விட்டு சிறிது கேப் விட வேண்டும். பேச முடியாதது போல் செய்து, மைக்கை விட்டு சற்று நகர்ந்து சென்று அழவும். (உங்கள் பாணியில்) மறுபடியும் மைக் பக்கம் வந்து, கண்கலங்கி சாரி சொல்லிவிட்டு, எமோஷனலாக பேச தொடங்கவும். என சினிமாவில் வசனத்தை யாரோ எழுதி கொடுத்த டயலாக் போல், கட்சி நிர்வாகி சந்திப்பு கூட்டத்திலும் எழுதி கொடுத்த வசனங்களை சினிமா போல் பேசி விட்டு சென்றுள்ளார் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

* உங்க இஸ்டத்துக்கு பேசாதீங்க… 50ஐ 500 ஆக்கிவிடாதீர்கள்: விஜய்யை வறுத்தெடுத்த ஜல்லிக்கட்டு ஜுலி
வேலூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய விஜய், ‘‘சாலையில் நின்று கொண்டிருந்த ஜல்லிக்கட்டுக் காளையைக் கண்டு எல்லோரும் பயந்தார்கள். ஆனால், ஒரு சிறுவன் மட்டும் பயப்படாமல் அருகில் சென்று அந்தக் காளைக்குப் புல்லுக்கட்டைக் கொடுத்து, அதைப் பிடித்துச் சென்றான்’’ என்று ஒரு குட்டிக்கதை சொன்னார். இந்நிலையில், ஜல்லிக்கட்டுப் போராட்டம் மூலம் பிரபலமான ஜுலி, விஜய்யின் பேச்சை விமர்சித்து காணொலி வெளியிட்டுள்ளார். அந்த காணொலியில் அவர் பேசியுள்ளதாவது; ஹாய் விஜய் அண்ணா; இப்போதுதான் உங்களின் வேலூர் பரப்புரை வீடியோ பார்த்தேன்.

வழக்கம்போல இதிலும் ஒன்னும் இல்லை. நீங்கள் பேசும்போது போகிறபோக்கில் ஜல்லிக்கட்டுக் காளைக்கு புல்லுக்கட்டைக் காட்டி ஒரு குழந்தை ஓரமாய் கொண்டுபோய் விட்டது எனச் சொல்லியுள்ளீர்கள். உங்கள் கட்சியில் உள்ளவர்களில் பாதிப்பேர் சிறுவர்கள். அவர்கள் நானும் போய் புல்லுக்கட்டைக் காட்டுகிறேன் என எதாவது நடந்துவிட்டால் என்ன செய்வது. 50ஐ 500 ஆக்கிவிடாதீர்கள். கஷ்டப்பட்டு எல்லோரும் போராடி ஜல்லிக்கட்டு வாங்கியுள்ளோம், இன்றைக்கு நன்றாக நடந்துகொண்டு இருக்கிறது. உங்கள் ரசிகர்கள் போய் புல்லுக்கட்டைக் காட்டி எதாவது நடந்துவிட்டால் மறுபடியும் போராட யாருக்கும் திராணி இல்லை. பாத்துப் பக்குவமாப் பண்ணுணே; நீங்க உங்க இஸ்டத்துக்குப் பேசிட்டுப் போய்டாதணே. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Related Stories: