×

ஓட்டு ஒண்ணு… எம்எல்ஏ ரெண்டு

இந்திய குடியரசு கட்சியின் மாநிலத்தலைவர் முன்னாள் எம்எல்ஏ செ.கு.தமிழரசன், சேலத்தில் மாநில நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தினார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘1950ல் இந்தியா குடியரசு ஆனதும், தனித்தொகுதிகள் பிரிக்கப்பட்டு அங்கு 2 ஓட்டு முறையை அமல்படுத்தினர். அதாவது நாடு முழுவதும் தனித்தொகுதிகளில் மட்டும் ஒரு வாக்காளர் 2 ஓட்டு போடணும். ஒன்று பொதுவான வேட்பாளருக்கு, மற்றொன்று தலித் வேட்பாளருக்கு என இருந்தது.

இப்படி தேர்வான நிலையில், பிறகு அந்த முறையை மாற்றி தனித்தொகுதியில் தலித் மட்டும் போட்டியிட வேண்டும் என்ற முறையை கொண்டு வந்தாங்க. உண்மையாக தலித்களுக்கு உழைக்கும் நபர், சுயேச்சையாக வெற்றி பெறவே இயலாது. அதனால் தனித்தொகுதிகளில் ஒரு ஓட்டுக்கு 2 எம்எல்ஏ வேணும். அதாவது ஒருவர் கட்சி சார்ந்த வேட்பாளராக இருந்தால், மற்றொருவர் தலித்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உண்மையான தொண்டாற்றிய நபராக இருக்க வேண்டும்.

அப்படி நடத்தால் தான், 75 சாதிகளை உள்ளடக்கிய ஆதிதிராவிடர் சமூகம் (எஸ்சி) முன்னேற்றமடையும்,’’ என்றார். மேலும் அவர் கூறுகையில், இந்த தேர்தல் முறையில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், ஜனநாயக ரீதியில், தேர்தலில் எங்களின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதால், யாருடன் கூட்டணி என்பது குறித்து வரும் 26ம் தேதி சென்னையில் நடக்கும் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்து அறிவிப்போம் என்றார்.

Tags : MLA ,S.K. Tamilarasan ,Republican Party of ,India ,Salem ,
× RELATED தேமுதிகவின் `வி’ சென்டிமென்ட்