ஐதராபாத்: சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படம் தெலுங்கிலும் வெளியாகிறது. இதன் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டார். அப்போது, நிகழ்ச்சித் தொகுப்பாளர் விஜய் தேவரகொண்டாவிடம், கடந்த காலத்திற்கு சென்று யாரையாவது சந்திக்க விரும்புகிறீர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, ‘‘நான் ஆங்கிலேயர்களை சந்திக்க விரும்புகிறேன். அவர்களை சந்தித்து இரண்டு அறைகள் கொடுப்பேன்.
அதேபோல் ஔரங்கசீப்பிற்கும் இரண்டு மூன்று அறைகள் கொடுக்க ஆசை உள்ளது. காரணம், ‘சாவா’ இந்தி படம் பார்த்தேன். அதன் மூலம் நான் ஔரங்கீப் மீது கடும் கோபத்தில் இருக்கிறேன்’’ என்று பேசினார். விஜய் தேவரகொண்டா இப்படி பேசியதும் சூர்யாவின் முகம் மாறிப்போனது. அவர் அதிர்ச்சி அடைந்தார். தனது படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் தேவையில்லாமல் இவர் ஏன் அரசியல் பேச வேண்டும் என்பதுபோன்றும் இதனால் ஒரு தரப்பு தனது படத்துக்கு எதிராக மாறலாம் என்பதாலும் அவர் அப்செட் ஆகிவிட்டாராம்.