ஐதராபாத்: சிரஞ்சீவியுடன் தெலுங்கு படத்தில் நடிக்க ரூ.18 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார் நயன்தாரா.
நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ.10 கோடி முதல் ரூ.12 கோடி வரை சம்பளம் பெறுகிறார். இந்நிலையில் சிரஞ்சீவி நடிக்கும் புதிய படத்தை அனில் ரவிபுடி இயக்குகிறார். இப்படத்தை சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதா கொனிடெலா மற்றும் சஹு கரபதி இணைந்து தயாரிக்கிறார்கள். இதில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சு நடத்தினார்கள். அப்போது அவர் ரூ.18 கோடி சம்பளம் தந்தால் நடிப்பதாக தெரிவித்தாராம்.
இதைக் கேட்டு தயாரிப்பாளர்கள் இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு முன் ‘சைரா நரசிம்ம ரெட்டி’, ‘காட்ஃபாதர்’ ஆகிய படங்களில் சிரஞ்சீவியுடன் நயன்தாரா நடித்திருக்கிறார். அந்த நட்பிலேயே நயன்தாராவிடம் சிரஞ்சீவி தரப்பு கால்ஷீட் கேட்டிருக்கிறது. ஆனால் அவர் அதிக சம்பளம் கேட்பதால் அவருக்கு பதிலாக வேறொரு ஹீரோயினை அணுக தயாரிப்பு தரப்பு யோசித்து வருகிறதாம்.