குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு!

டெல்லி: குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயார் நிலையில் இருப்பதாக ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. மாநிலங்களவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள் ஆகியோர் துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய உள்ளனர்.

இந்த ஆண்டு நடக்கவுள்ள இந்திய துணை ஜனாதிபதி தேர்தலுக்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது. துணை ஜனாதிபதி தேர்தலில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் மக்களவை உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்று துணை ஜனாதிபதியை தேர்வு செய்கின்றனர்.

இதற்காக அந்த உறுப்பினர்களுக்கான வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் தயாரிப்பது அவசியமாகும். அந்தவகையில் தற்போதைய தரவுகளுடன் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் தயார் செய்து இறுதி செய்துள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பாணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.

 

The post குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: