டாஸ்மாக் கடையில் பணம் திருடும் மேற்பார்வையாளர்

கெங்கவல்லி, மே 22: தலைவாசல் அருகே டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளர் பணம் திருடும் வீடியோ வைரலான நிலையில், டாஸ்மாக் மேலாளர் விசாரணை நடத்தி வருகிறார். சேலம் மாவட்டம் தலைவாசல் -வீரகனூர் பிரிவு ரோடு வேப்பம்பூண்டி மேடு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில்(எண்.7235) மேற்பார்வையாளராக மகேஸ்வரன் பணியாற்றி வருகிறார். இவர், பணி முடிந்து செல்லும்போது வசூல் பணத்தில் சிலவற்றை யாருக்கும் தெரியாமல் தனது பேண்ட் பாக்கெட்டில் திணித்தது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது, அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது. இதுகுறித்து சேலம் மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளர் பன்னீர்செல்வத்திடம் கேட்டபோது, தினந்தோறும் இரவு 10 மணிக்கு மேல் கடை மூடிய பிறகு அன்று விற்பனையான பணத்தை முழுமையாக எண்ணி கணக்கு பார்த்துவிட்டு சேல்ஸ்மேன், கடையின் மேற்பார்வையாளரிடம் கணக்கு வழங்குவது வழக்கம். வீடியோ குறித்து தற்போதுதான் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

The post டாஸ்மாக் கடையில் பணம் திருடும் மேற்பார்வையாளர் appeared first on Dinakaran.

Related Stories: