தென்காசி, கடையம், சுரண்டை செல்லும் வெளியூர் பேருந்துகள் பஸ்நிலையத்திற்குள் உள்ளே சென்றுவிட்டு தற்போது வழக்கு வாசல் வழியாக விரைவாக திரும்பி வருகின்றன. பஸ்நிலையத்திற்கு பஸ்கள் செல்லும் தெற்கு புற வாசல் பகுதியில் பள்ளங்கள் காணப்படுவதால், பஸ்கள் மெதுவாகவே உள்ளே செல்கின்றன.
ஆனால் பஸ்கள் வெளியேறும் மேற்கு வாசல் பகுதியில் பஸ்கள் போட்டி போட்டு கொண்டு ஒன்றையொன்று முந்தி கொண்டு வெளியேற முற்படுகின்றன. மேலும் மதுரை சாலையில் வரும் வாகனங்களும் வேகமாக வருகின்றன.
இதனால் அப்பகுதியில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியேறும் பகுதியில் வேகத்தடைகள் அமைத்திட வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர்.
The post நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் பஸ்கள் வெளியேறும் இடத்தில் வேகத்தடைகள் அமைக்கப்படுமா? appeared first on Dinakaran.