கல்வித்துறையை வலுப்படுத்த, 778 பகுதிநேர ஆசிரியர்கள் நிரந்தரப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் 6,200 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மாநிலத்தில் மாணவர் சேர்க்கை கடந்த 20 ஆண்டுகளாக கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த 2003-04ல் 9.71 லட்சமாக இருந்த அரசு பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை 2023-24ல் 4.29 லட்சமாக குறைந்துள்ளது. மாணவர்-ஆசிரியர் விகிதம் 14:1 என்ற சிறந்த அளவில் இருந்தாலும், 3,473 பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளனர். இதைச் சரிசெய்ய, மூடப்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்கள் பிற பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்’ என்றார். இருப்பினும், எதிர்க்கட்சியான பாஜக, அரசுப்பள்ளிகளை மூடுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
The post இமாச்சல் பிரதேசத்தில் மூன்று ஆண்டில் 1,200 அரசுப்பள்ளிகள் மூடல்: மாணவர் சேர்க்கை இல்லாத பரிதாபம் appeared first on Dinakaran.