கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரியை சேர்ந்த மாணவர்கள், சர்வதேச மன்சூரிய குங்பூ போட்டியில், 21 பதக்கங்களை வென்றுள்ளனர். வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில், கடந்த 3 மற்றும் 4ம் தேதி சர்வதேச மன்சூரியா குங்பூ அகடாமியின் சார்பில் கிராண்ட் மாஸ்டர் மல்லை சி.இ.சத்யா தலைமையில், தேசிய அளவிலான அனைத்து தற்காப்பு கலை போட்டி நடைப்பெற்றது.
இதில், தமிழ்நாடு, பாண்டிச்சேரி, மணிப்பூர், அஸ்ஸாம், திரிபுரா, ஒடிசா, பஞ்சாப், கேரளா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து திரளான வீரர்கள் கலந்துகொண்டனர். இதில், கூடுவாஞ்சேரி அடுத்த விஷ்ணு பிரியா நகரில் உள்ள கராத்தே அகடாமியின் சார்பில் 21 மாணவர்கள் கலந்துகொண்டு 8 தங்கம், 7 வெள்ளி மற்றும் 6 வெண்கல பதக்கங்களை வென்றனர்.
The post சர்வதேச மன்சூரிய குங்பூ போட்டி மாணவர்களுக்கு 21 பதக்கங்கள் appeared first on Dinakaran.