காஞ்சிபுரம், மே 17: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 183 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 7,748 மாணவர்கள், 7,450 மாணவிகள் என மொத்தம் 15,198 பேர் தேர்வு எழுதினர்.
வினாத்தாள்கள் திருத்தப்பட்டு நேற்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வில் 94.85 சதவீதம் மாணவ – மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 93.02 சதவீத மாணவர்கள், 96.75 சதவீத மாணவிகள் என மொத்தம் 94.85 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அரசு பள்ளி 93.36 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 32 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது. 45 தனியார் பள்ளிகள் 100 சதவீதம் அடைந்துள்ளது. தேர்வு முடிவுகள்படி காஞ்சிபுரம் மாவட்டம் 16ம் இடத்தையும், அரசு பள்ளிகளை பொறுத்தவரை 15வது இடத்திலும் உள்ளது.
பிளஸ் 1 தேர்வில் 88.18% மாணவர்கள் தேர்ச்சி
தமிழ்நாடு முழுவதும் பிளஸ்1 அரசு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 108 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 6,786 மாணவர்கள், 7,445 மாணவிகள் என மொத்தம் 14,231 பேர் பிளஸ்1 அரசு பொதுத்தேர்வினை எழுதியிருந்தனர். இந்த, வினாத்தாள்கள் திருத்தப்பட்டு பிளஸ்1 அரசு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ – மாணவிகள் 88.18 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
The post காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.85 சதவீதம் பேர் தேர்ச்சி appeared first on Dinakaran.