திருப்பூர், மே 21: திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை குறைக்கும் வகையில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, வாகனங்களில் செல்வோர் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், பேருந்துகளில் செல்பவர்கள் படியில் தொங்கியபடி செல்ல கூடாது என தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தனர். பேருந்து நிறுத்தங்கள் மற்றும் போலீசாரின் சோதனை சாவடிகளில் அதுபோல் பேருந்துகளில் தொங்கியவர்கள் சென்றால் பேருந்துகளை நிறுத்தி எச்சரிக்கை செய்து அனுப்பி வந்தனர்.
இந்நிலையில், நேற்று திருப்பூர் தாராபுரம் சாலை சந்திராபுரம் செக் போஸ்ட் அருகே பேருந்தில் தொங்கியபடி பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிலர் சென்றுள்ளனர். அவர்களை பேருந்தில் இருந்து இறக்கிய காவலர்கள் இனிமேல் பேருந்துகளில் இதுபோல் தொங்கியபடி செல்ல மாட்டோம் என கடிதம் எழுதி வாங்கியபடி எச்சரித்து அனுப்பினர். இனிமேலும் இதுபோல் பேருந்தில் தொங்கியபடி செல்வதை கண்டால் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
The post பேருந்தில் தொங்கிய மாணவர்களை கடிதம் எழுத வைத்து போலீசார் எச்சரிக்கை appeared first on Dinakaran.