சிக்கண்ணா அரசு கல்லூரியில் ரூ.4.25 கோடியில் கட்டிடம் கட்டும் பணி

திருப்பூர், மே 21: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரியில் 10 வகுப்பறைகள் மற்றும் இரண்டு கழிப்பறைகள் ரூ.4.25 கோடி மதிப்பீட்டுகான கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இந்நிலையில் சிக்கண்ணா அரசு கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் சுப்பராயன் எம்பி, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியன் மற்றும் கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், நாட்டு நலப்பணித்திட்ட அழகு 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post சிக்கண்ணா அரசு கல்லூரியில் ரூ.4.25 கோடியில் கட்டிடம் கட்டும் பணி appeared first on Dinakaran.

Related Stories: