அந்தியூர், மே 10 : ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள ஒலகடம் தாளபாளையம் ஜெயந்தி காலனியைச் சேர்ந்தவர் முருகேசன் (55). இவர், ஒலகடம் பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணிபுரிகிறார். கடந்த 8ம் தேதி, ஒலகடம் வாரச்சந்தை பொதுக்கழிப்பிடத்தை முருகேசன் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, கழிப்பிடத்தை பயன்படுத்த வந்த ஒலகடம் பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்த விஜய் என்பவரிடம், கழிப்பறையில் தண்ணீர் ஊற்றுமாறு கூறியுள்ளார்.
ஆத்திரமடைந்த விஜய், முருகேசனை சாதி பெயரை சொல்லி திட்டி அடித்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த முருகேசன் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து முருகேசன் நேற்று வெள்ளித்திருப்பூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான விஜய்யை தேடி வருகின்றனர்.
The post தூய்மை பணியாளரை சாதி பெயரை கூறி தாக்கியவர் மீது வன்கொடுமை வழக்கு appeared first on Dinakaran.