கன மழை காரணமாக பர்கூர் மலைப்பாதையில் மண் சரிவு

அந்தியூர், மே 21: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து பர்கூர் மலைப்பாதை வழியாக கர்நாடக செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. கடந்த நான்கு நாட்களாக பர்கூர் அதன் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்தியூரில் இருந்து பர்கூர் மலைப்பாதை ரோட்டில் வரட்டுப்பள்ளம் அணை முதல் வளைவு பகுதியில் மூன்று இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. பெரிய அளவில் மண் சரிவு ஏற்படாததால் போக்குவரத்து பாதிப்பு எதுவும் இல்லை. இருப்பினும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் செல்வதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு நெடுஞ்சாலை மற்றும் வனத்துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

The post கன மழை காரணமாக பர்கூர் மலைப்பாதையில் மண் சரிவு appeared first on Dinakaran.

Related Stories: