ஈரோடு, மே 16: கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே ஈரோடு மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி முதலே நாள்தோறும் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் வாட்டி வருகிறது. இந்த நிலையில் தற்போது கோடைக்கால தொடங்கி, அக்னி நட்சத்திர காலம் நடைபெற்று வரும் நிலையில், பகலில் சராசரியாக 100 முதல் 104 டிகிரி பாரன்ஹீட் வரை வெளியில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக, ஈரோடு நகரில் கடந்த 3 நாள்களாக 104 டிகிரி பாரன் ஹீட் வெயில் வாட்டி வருகிறது.
இந்த நிலையில், ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானில் ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆனால், தொடர்ச்சியாக மழைக்கான அறிகுறிகள் இல்லாத நிலையில் நேற்று முன் தினம் மாலை முதலே ஈரோடு நகரில் இடி,மின்னலுடன் மிதமான காற்றும் வீசியது. வெயிலின் தாக்கமும் தனிந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதனை தொடர்ந்து, இரவு 8 மணியளவில் ஈரோடு நகரில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மிக லேசான மழை பெய்தது. தொடர்ந்து, நேற்று காலை 8 மணி நிலவரத்தின்படி, மாவட்டத்தின் ஒருசில இடங்களில் பெய்த மழையளவின்படி, மொத்தம் 61.20 மி.மீ.மழை பதிவாகி இருந்தது.
மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:
கொடுமுடி 6, சென்னிமலை – 3.60, பவானி 3, கோபி 6.20, கொடிவேரி அணை 4, சத்தியமங்கலம் 8, பவானிசாகர் அணை 1.20. இதில், மாவட்டத்தில் அதிக அளவாக மொடக்குறிச்சியில் 29.20 மி.மீ. மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
The post பகலில் 104 டிகிரி வெயில் இரவில் 61 மி.மீ. மழை பதிவு appeared first on Dinakaran.