10ம் வகுப்பு பொதுத்தேர்வில் கோபி  வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை

கோபி, மே 17: கோபி  வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ளனர். 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், கோபி அருகே தாசம்பாளையத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியானது 21 ஆண்டுகளாக தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது. இந்தாண்டு மாணவி ரிதன்யா 500க்கு 496 மதிப்பெண்களுடன் முதலிடமும், மாணவி பரணி தர்ஷினி 494 மதிப்பெண்களுடன் இரண்டாமிடமும், மாணவர் ஸ்ரீஹரன் 493 மதிப்பெண்களுடன் மூன்றாமிடமும் பெற்று உள்ளார்.

அதே போன்று ஆங்கிலத்தில் 6 பேரும், கணிதத்தில் 5 பேரும், அறிவியல் மற்றும் சமூக அறிவியலில் தலா 14 மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று உள்ளனர். 3 பாடங்களில் 3 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்களும், 6 மாணவர்கள் 2 பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்களும் பெற்று உள்ளனர். 491 முதல் 495 மதிப்பெண்களுக்கு மேல் 10 பேரும், 486 முதல் 490 மதிப்பெண்கள் வரை 12 பேரும், 485 மதிப்பெண்கள் வரை 15 பேரும், 480 வரை 16 பேரும், 475 வரை 24 பேரும் மதிப்பெண்கள் பெற்று உள்ளனர்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவியரை முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன், கல்வி நிறுவனங்களின் செயலாளர் ஜி.பி.கெட்டிமுத்து, இயக்குநர்கள் முருகுசாமி, செங்கோட்டையன், ஜோதிலிங்கம், ராசு என்கிற மோகனசுந்தரம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.

The post 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் கோபி  வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.

Related Stories: