மொடக்குறிச்சி, மே 23: அவல்பூந்துறை பேரூராட்சியின் 2025-2026 சிறப்பு நிதி, 2024-2025ம் ஆண்டு அடிப்படை கட்டமைப்பு நிதி, 2024-2025-ம் ஆண்டு 15வது நிதிக்குழு நிபந்தனையற்ற மானியம் ஆகிய திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 24 லட்சம் மதிப்பீட்டில், பேரூராட்சிக்குட்பட்ட வார்டு எண் 13ல் உள்ள ராட்டைச் சுற்றிபாளையம் மெயின் வீதி, ராட்டைசுற்றிபாளையம் அரிசன காலனி மற்றும் 14வது வார்டில் உள்ள பள்ளியூத்து மேட்டூர் சந்தை ஆகிய பகுதிகளில் சாலை மேம்பாடு, பாலம் அமைத்தல் மற்றும் வடிகால் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கி பூமி பூஜையிட்டு பணியை தொடங்கி வைத்தார். அவல்பூந்துறை பேரூராட்சித் தலைவர் ராதாமணி பாலசுப்பிரமணி, பேரூராட்சி செயல் அலுவலர் சசிகலா, அவல்பூந்துறை பேரூர் திமுக செயலாளர் சாமியப்பன் என்கிற சண்முகசுந்தரம், இளநிலை பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் ஒப்பந்ததாரர்கள் அலுவலகப் பணியாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
The post வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமிபூஜை appeared first on Dinakaran.