மொடக்குறிச்சி விற்பனை கூடத்தில் ரூ.12.54 லட்சத்துக்கு தேங்காய், தேங்காய் பருப்பு ஏலம்

மொடக்குறிச்சி, மே 22: மொடக்குறிச்சி உப ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 28 ஆயிரத்து 218 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.47.18 காசுக்கும், அதிகபட்ச விலையாக ரூ.66.79 காசுக்கும், சராசரி விலையாக ரூ.57.79 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 10 ஆயிரத்து 691 கிலோ எடையுள்ள தேங்காய் ரூ.5 லட்சத்து 92 ஆயிரத்து 538 ரூபாய்க்கு விற்பனையானது.

அதேபோல் தேங்காய்பருப்பு 150 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.188.79 காசுக்கும், அதிகபட்ச விலையாக ரூ.196.79 காசுக்கும், சராசரி விலையாக ரூ.196.79 காசுக்கும். இரண்டாம் தரம் குறைந்தபட்ச விலையாக ரூ.132.60 காசுக்கும், அதிகபட்ச விலையாக ரூ.175.79 காசுக்கும், சராசரி விலையாக ரூ.171.20 காசுக்கு ஏலம் போனது. மொத்தமாக 3,785 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு ரூ.6 லட்சத்து 62 ஆயிரத்து 338 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது. தேங்காய், தேங்காய் பருப்பு சேர்த்து ரூ.12 லட்சத்து 54 ஆயிரத்து 876 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.

The post மொடக்குறிச்சி விற்பனை கூடத்தில் ரூ.12.54 லட்சத்துக்கு தேங்காய், தேங்காய் பருப்பு ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: