கோபி, மே 17: கோபி அருகே உள்ள நம்பியூர் காமராஜ் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500 க்கு 496 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் நான்காம் இடம் பிடித்தும் கோபி கல்வி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தும் சாதனை படைத்தனர். இதில், மாணவர் கார்த்திகேயன் 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் தமிழ் 99, ஆங்கிலம் 99, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 98. கோபி வட்டார அளவில் முதலிடமும் மாநில அளவில் நான்காம் இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார். மாணவி லக்ஷனா 490 மதிப்பெண்கள், மாணவி அக்ஷரா 487 மதிப்பெண்கள் பெற்று இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பெற்றனர்.
பள்ளியில் 5 மாணவர்கள் கணிதம், அறிவியல், சமூக அறிவியல், பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர். மேலும், தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றதுடன், பள்ளி தொடர்ந்து 20வது வருடமாக 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது. வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் ஜவகர், இணைத்தாளர் சுமதி ஜவகர், பள்ளியின் முதல்வர் மைதிலி ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
The post 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் நம்பியூர் காமராஜ் மேல்நிலை பள்ளி மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.