செங்கல்பட்டு, மே 10: திருவிடந்தை கிராமத்தில் நாளை சித்திரை முழு நிலவு இளஞைர் பெருவிழா மாநாடு நடைபெறுதையொட்டி, நாளை 11ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படப்படுகி்னறன. இது குறித்து கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
திருப்போரூர் வட்டம், திருவிடந்தையில் நடைபெறம் சித்திரை முழுநிலவு பெருவிழா மாநட்டையொட்டி, செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் உரிம நிறுவனங்களுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு முன்னிட்டு மதுபானக் கடைகள் மற்றும் அனைத்து மதுக்கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும்.
அன்றைய தினத்தில் கடைகள் மதுபானக் கூடங்கள் திறந்திருந்தாலோ அல்லது சட்டவிரோதமான இதர வழிகளில் விற்பனை செய்தாலோ உரிய சட்ட விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அருண்ராஜ் அறிக்கையில் கூறியுள்ளார்.
The post டாஸ்மாக் கடைகள் நாளை மூடல் appeared first on Dinakaran.