திருப்பூர், மே 3: திருப்பூர் பி.என்.ரோடு பூலுவபட்டியை அடுத்த அம்மன்நகர் பகுதியை சேர்ந்தவர் வாசிம் அக்ரம் (27). அப்பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். வாசிம் அக்ரம் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்த பெண் இவருடைய காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த வாசிம் அக்ரம் நேற்று மதியம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அறிந்த திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஒருதலை காதலால் வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.