வெள்ளகோவிலில் ரூ.6.79 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை ஏலம்

 

வெள்ளகோவில்,மே23: வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பும் வியாழனன்று சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெறும்.நேற்று நடந்த ஏலத்திற்கு 13 விவசாயிகள் கலந்து கொண்டு 11 ஆயிரம் கிலோ சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.இதில் வெள்ளகோவில்,காங்கயம்,முத்தூர்,ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.63க்கும், குறைந்தபட்சம் ரூ.45.09 க்கும் கொள்முதல் செய்தனர், மொத்தம் ரூ.6,79,832க்கு வணிகம் நடைபெற்றது. இதனை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட முதுநிலைச் செயலாளர் தர்மராஜ் தெரிவித்தார்.

The post வெள்ளகோவிலில் ரூ.6.79 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: