திருப்பூர்,மே23: திருப்பூர், மத்திய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவல் அடிப்படையில் மத்திய போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.அப்போது மங்கலம் ரோட்டிலுள்ள ஜான் ஜோதி கார்டனில் உள்ள ஒரு வீட்டை சோதனை செய்தனர். அங்கு 18 கிலோ புகையிலைப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.போலீசார் விசாரனையில் ஆண்டிபாளையம் பகுதியை சேர்ந்த காளிதாஸ்(30),செந்தூர்பாண்டியன்(33),முனியசாமி(26) என்பது தெரியவந்தது. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 18 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
The post 18 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.