திண்டுக்கல்: திண்டுக்கல் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வேடசந்தூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி சுற்றுலா பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து குள்ளானதில் 11 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தின் முன் சட்டென குறுக்கிட்ட கார்மீது மோதாமல் இருக்க ஒட்டுநர் முயன்றபோது விபத்து நிகழ்ந்ததாகத் தகவல் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
The post வேடசந்தூர் அருகே மினி சுற்றுலா பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்து appeared first on Dinakaran.