வல்லம்: கர்நாடக மாநிலம் பெங்களூரு வடக்கு பகுதியை சேர்ந்த 11 பேர் ஒரு வேனில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தனர். இவர்கள் திருச்சி வந்து அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு வேளாங்கண்ணிக்கு சென்றபோது, செங்கிப்பட்டி மேம்பாலம் அருகே முத்தாண்டிப்பட்டி பிரிவு சாலையில் பஸ் மீது மோதியது. இதில் வேனில் வந்த ஜான் போஸ்கோ (58), சால்ஸ் என்பவரின் மனைவி நளினி(45), டிரைவர் ஜெகதீசன்(45), செல்சியா ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலும், தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆரோக்கியதாஸ் என்பவரும் இறந்தனர். மேலும் 6 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் நேற்று முன்தினம் நள்ளிரவு சால்ஸ் இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.
The post சுற்றுலா வேன் பஸ் மோதலில் பலி 6 ஆக உயர்வு appeared first on Dinakaran.