ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: பரங்கிமலை ரயில் நிலைய திறப்பு விழாவில் எல்.முருகன் பேச்சு

சென்னை: அம்ரிக் பாரத் ரயில் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மேம்பாட்டு பணிகள் முடிந்த 103 ரயில் நிலையங்களை ராஜஸ்தானில் இருந்து பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார். அதன்படி, சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் தா.மோ.அன்பரசன், நல்லி குப்புசாமி மற்றும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில், ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது: கடந்த காலங்களில் தமிழக ரயில் நிலைய மேம்பாட்டிற்கு ரூ.800 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு மட்டும் ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள் சர்வதேச விமான நிலையங்களை போல் உள்ளன. புல்லட் ரயில் கனவை இந்தியாவுக்கு நிறைவேற்றி தர இருப்பவர் பிரதமர். விரைவில் பயன்பாட்டுக்கு அது வர இருக்கிறது.

வந்தே பாரத் ரயில்கள் சென்னையில் உள்ள ஐசிஎப்-இல் தயாரிக்கப்பட்டு உலக நாடுகளுக்கு எல்லாம் அது கொண்டு செல்லப்படுகிறது. ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் உலகத்திற்கு நம்மை யார் என உணர்த்தி உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் மாணவர்களுக்கான போட்டிகள் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

The post ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: பரங்கிமலை ரயில் நிலைய திறப்பு விழாவில் எல்.முருகன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: