கோடை விடுமுறை முடிந்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்பும் மக்கள்: கிளாம்பாக்கத்தில் நெரிசல்

 

கூடுவாஞ்சேரி, மே. 28: கோடை விடுமுறை முடிந்து தென் மாவட்டங்களில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் சென்னை திரும்புகின்றனர். இதனால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் குவிந்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.  பள்ளி ஆண்டு தேர்வு மற்றும் கல்லூரி தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறைக்காக கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அவரவர் சொந்த ஊருக்கு செல்வதற்காக குடும்பம் குடும்பமாக சென்றனர்.

மேலும், கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் கூடுதலாக விடுமுறை கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், வெப்பச் சலனம் காரணமாக கோடை மழை தற்போது தமிழக முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. இதில் திட்டமிட்டபடி ஜூன் மாதம் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளிகள் திறக்க இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் கோடை விடுமுறை முடிந்து தென் மாவட்டங்களில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் சென்னை திரும்புகின்றனர். இதனால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் குவிந்து, வண்டலூரில் இருந்து கூடுவாஞ்சேரி வரை ஜிஎஸ்டி சாலையில் இருபுறமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

The post கோடை விடுமுறை முடிந்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்பும் மக்கள்: கிளாம்பாக்கத்தில் நெரிசல் appeared first on Dinakaran.

Related Stories: