செய்யாறு, ஏப். 27: செய்யாறு அடுத்த மோரணம் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் செங்கட்டான்குண்டில் கிராமத்தில் ரோந்துசென்றனர். அப்போது பாப்பாந்தாங்கல் கூட்ரோடு அருகே டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் சோதனையிட்டனர். அப்போது மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றுக்கொண்டிருந்த நபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் செங்கட்டான்குண்டில் கிராமத்தை சேர்ந்த வடிவேல்(57) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 25மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வடிவேலை கைது செய்தனர்.
The post கள்ளச்சந்தையில் மதுவிற்றவர் கைது 25 மது பாட்டில்கள் பறிமுதல் appeared first on Dinakaran.