ஆரணி, மே 22: ஆரணி பேக்கரி கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 50 கிலோ தரமற்ற உணவுப் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆரணி புதிய பஸ் நிலையத்தில் உள்ள பேக்கரி கடை ஒன்றில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்வதாக நகராட்சி அதிகாரிகளுக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில், சுகாதார ஆய்வாளர் வடிவேல் தலைமையில் துப்புரவு மேற்பார்வையாளர் பிரதாப் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பேக்கரி கடைக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு பாதுகாப்பற்ற முறையில், தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்து. உடனே நகராட்சி ஊழியர்கள் பேக்கரியில் விற்பனைக்காக வைத்திருந்த பிரட், பன் உட்பட தரமற்ற 50 கிலோ உணவுப்பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். தொடர்ந்து, ஆரணி காந்தி சாலை, பஸ் நிலையம், காந்தி சாலை ஆகிய இடங்களில் உள்ள கடைகளில் ஆய்வு செய்து, அரசால் தடை செய்யப்பட்ட 30 கிலோ பிளாஸ்டிக் கவர், கிளாஸ் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்தனர். பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்தால் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளர்களுக்கு நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
The post 50 கிலோ தரமற்ற உணவுப்பொருட்கள் பறிமுதல் ஆரணி பேக்கரி கடையில் appeared first on Dinakaran.