போளூர், மே 25: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவில் கடந்த 16ம் தேதி முதல் போளூர், கேளூர், சந்தவாசல், மொடையூர். மண்டகொளத்தூர் ஆகிய 5 உள்வட்டங்களுக்கான ஜமாபந்தி நடந்தது. இதன் நிறைவு விழா விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன் தலைமை தாங்கினார். தாசில்தார் வெங்கடேசன் வரவேற்றார். இதில் 365 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கலசபாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் பேசியதாவது: போளூர் பெரிய ஏரிக்கு செய்யாற்றின் குறுக்கே எலத்தூர் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அது சேதமடைந்த நிலையில் அமைச்சர் எ.வ.வேலுவின் முயற்சியின் காரணமாக மீண்டும் புதியதாக ரூ.18 கோடி செலவில் விரைவில் தடுப்பணை கட்டப்பட உள்ளது என்றார்.
போளூர் தாலுகாவில் 5 நாட்கள் நடைபெற்ற ஜமாபந்தியில் பொதுமக்களிடமிருந்து 955 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 394 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. 365 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. இதில் நகர மன்ற தலைவர் ராணிசண்முகம், துணை தலைவர் சாந்திநடராஜன், கலெக்டர் அலுவலர் வரவேற்பு தாசில்தார் சண்முகம், தனி தாசில்தார் சுமதி, மண்டல துணை தாசில்தார் ஜீவா, வட்ட வழங்கல் அலுவலர் சிவலிங்கம், தலைமையிடத்து துணை தாசில்தார் அருள்குமார், மண்டல துணை தாசில்தார் சுசிலா, வட்ட துணை ஆய்வாளர் உமாநாத் வழக்கறிஞர் சுப்பிரமணியன், களம்பூர் பேருராட்சி தலைவர் பழனி, வருவாய் அலுவலர் மாலதி, கிராம நிர்வாக அலுவலர்கள் தமிழ்செல்வன், பாஸ்கரன், மகாலிங்கம், சசிகுமார், இளையகுமார், மலையரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அமூல் நன்றி கூறினார்.
The post செய்யாற்றின் குறுக்கே அணை கட்ட ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு ஜமாபந்தி நிறைவு விழாவில் எம்எல்ஏ தகவல் போளூர் பெரிய ஏரிக்கு appeared first on Dinakaran.