நர்சிங் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை தாய் கண்டித்ததால்

ஆரணி, மே 21: ஆரணி டவுன் அருணகிரிசத்திரம் பகுதியில் உள்ள திருவள்ளூவர் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகள் தனலட்சுமி(19). தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், தனலட்சுமி நேற்று செல்போனில் பிரீபையர் கேம் விளையாடி கொண்டிருந்தாராம். அப்போது அவரை தாய் சாவித்திரி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால், மனவேதனை அடைந்த தனலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முதல் மாடியில் உள்ள அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அறையின் கதவை உடைத்து தனலட்சுமியை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆரணி டவுன் போலீசார் தனலட்சுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, தனலட்சுமியின் தாய் சாவித்திரி, ஆரணி டவுன் போலீசில் நேற்று கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

The post நர்சிங் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை தாய் கண்டித்ததால் appeared first on Dinakaran.

Related Stories: