ஓய்வு பெற்ற சார்பதிவாளர் வீட்டில் 15 சவரன் திருட்டு போலீசார் விசாரணை செய்யாறில்

செய்யாறு, மே 21: செய்யாறு டவுன் அண்ணா நகர் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் விஜயகுமார்(65), சார் பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் நேற்று முன்தினம் அவரது மனைவி அன்புடன் வெளியூர் சென்றிருந்தனர். இந்நிலையில், நேற்று காலை வீட்டின் அருகில் இருந்தவர்கள் வீடு திறந்து இருப்பதாக விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். வீட்டிற்கு விரைந்து வந்த பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் உள்ள நகைகள் சுமார் 15 சவரன் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து விஜயகுமார் செய்யாறு காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன் பேரில் அங்கு வந்த டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் ஜெபராஜ் மணிகண்டன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளை சேகரித்தனர். மேலும் மோப்பநாய் வர வைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். ஆள் நடமாட்டம் மற்றும் அதிக குடியிருப்பு உள்ள பகுதியில் இது போன்ற துணிகர கொள்ளை சம்பவம் நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post ஓய்வு பெற்ற சார்பதிவாளர் வீட்டில் 15 சவரன் திருட்டு போலீசார் விசாரணை செய்யாறில் appeared first on Dinakaran.

Related Stories: