தாய், மகனை தாக்கி ெகாலை மிரட்டல் அண்ணன், தம்பி மீது வழக்கு நிலத்தில் தண்ணீர் ேதங்கிய தகராறு

பெரணமல்லூர், மே 23: நிலத்தில் தண்ணீர் ேதங்கிய தகராறில் தாய், மகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த அண்ணன், தம்பி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த சஞ்சீவிராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் உத்திராபதி மனைவி சவுபாக்கியம்(63). இவரது நிலமும், அதே பகுதியை சேர்ந்தவர் கமலக்கண்ணன், அவரது சகோதரர் சதீஷ் ஆகியோரது நிலமும் அருகருகே உள்ளது. இதில் கமலகண்ணன், சதீஷ் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான இடத்தில் கடையை கட்டி உள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக, சவுபாக்கியம் நிலத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த தண்ணீர் வெளியேறுவதற்கு கமலக்கண்ணன், சதீஷ் ஆகியோரது கடை தடையாக உள்ளதாம். இதுகுறித்து சவுபாக்கியம் நேற்றுமுன்தினம் கமலக்கண்ணன், சதீஷிடம் கேட்டுள்ளார்.

இதில் இவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கமலக்கண்ணன் சவுபாக்கியத்தை சரமாரி தாக்கினாராம். இதை தடுக்க முயன்ற சவுபாக்கியத்தின் மகன் தண்டபாணி(36) என்பவரை கமலக்கண்ணன், சதீஷ் இருவரும் சேர்ந்து இரும்புராடாலும், கல்லாலும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தண்டபாணி பெரணமல்லூர் காவல் நிலையத்தில் நேற்றுமுன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் கமலக்கண்ணன், சதீஷ் ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தாய், மகனை தாக்கி ெகாலை மிரட்டல் அண்ணன், தம்பி மீது வழக்கு நிலத்தில் தண்ணீர் ேதங்கிய தகராறு appeared first on Dinakaran.

Related Stories: