கரும்பு விவசாயிகளுக்கு ரூ.23.47 கோடி வழங்கல்

 

நாமக்கல், மே 26: மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு ரூ.23.47 கோடி நிலுவை தொகை வழங்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், மோகனூரில் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு 2024-25ம் ஆண்டு அரவை பருவத்தில், கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, கரும்புக்கான பணம் வழங்கப்படாமல் இருந்து வந்தது. கரும்பு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் ஆலை நிர்வாகத்திடம், கரும்புக்கான நிலுவைத்தொகையை வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து, தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், சுற்றுலா மற்றும் சர்க்கரை துறை அமைச்சர் ராஜேந்திரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ராஜேஸ்குமார் எம்பி, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதையடுத்து 2024-25ம் ஆண்டுக்கான கரும்பு நிலுவைத்தொகை, ரூ.23.47 கோடியை விவசாயிகளுக்கு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில், ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, கரும்பு நிலுவை தொகை சம்மந்தப்பட்ட வங்கிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்க உத்தரவிட்ட முதலமைச்சருக்கு விவசாய சங்கங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன.

 

The post கரும்பு விவசாயிகளுக்கு ரூ.23.47 கோடி வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: